Translations:Forgiving Step by Step/25/ta

இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும். நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.