Version: 1.0

குடும்பம் மற்றும் கர்த்தருடனான நமது உறவு

Other languages:
More information about Tamil

பிதா,இயேசு கிறிஸ்து (குமாரன்)மற்றும் பரிசுத்த ஆவியானவர்

தேவன் நம்மைச் சிருஷ்டித்தார். அவருடைய படைப்பின் அற்புதத் தன்மையைப் பார்க்கும்போது,​​அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள எந்த வழியும் இல்லை என்பதை நாம் உணர்கிறோம்.ஆனால் அவர் தன்னைப் பற்றிய அம்சங்களை வெளிப்படுத்தியிருக்கிறார், அதனால் நாம் அவரை மேலும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அவர் ஒருவராக இருந்தாலும்,அவர் மூவராகவும் இருக்கிறார் - எனவே அவருடனான நமது உறவு இந்த மூன்றோடும் உள்ளடக்கியது.இந்த மூவரில் ஒருவரை நாம் மற்றவர்களை விட நன்கு அறிந்திருக்கலாம். ஆனால் நாம் பிதா,குமாரன்,(இயேசு கிறிஸ்து)மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவருடனான உறவுகளில் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும்:

குடும்பம் பற்றிய தேவனின் கருத்து

தேவன் மனுஷனைத் தனது சாயலில் ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்தார்.இதன் பொருள் அவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லை,ஆனால் அவரை நீங்கள் இருவராகவும் காணலாம்.நம்மைப் பயனளிக்கும்படி செய்து குடும்பம் என்ற கருத்தையும் உருவாக்கினார்

குடும்பம் மூன்று முக்கிய உறவுகளை உள்ளடக்கியது: தந்தை,தாய் மற்றும் உடன்பிறப்புகள்.-அன்பு, பாதுகாப்பு,ஆறுதல், அடையாளம் போன்றவற்றுக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்ய இந்தப் உறவுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.இந்தத் தேவைகளைத் தேவன் கற்பனை செய்த விதத்தில் பூர்த்தி செய்யப்பட்டால்,நாம் முற்றிலும் ஆரோக்கியமான சூழலில் வளர்கிறோம். துரதிர்ஷ்டவசமாக,நமது பாவ உலகில் இது எப்போதும் இல்லை.இந்த உறவுகளில் ஏற்பட்ட சில குறைபாடுகளால் இவை சிதைந்து போய்விட்டன.நமது தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது,அது நம் வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்துகிறது.இவை அனைத்தினாலும் எப்படி நம் உறவுகளைப் பார்க்கிறோம்,எப்படி நம் குடும்பத்தைப் பார்க்கிறோம், எப்படி நம்மை நாமே பார்க்கிறோம், எப்படி தேவனை நோக்குகிறோம் என்பதை எல்லாம் பாதிக்கிறது.

தேவனுக்கும் குடும்ப உறவு களுக்கும் உள்ள தொடர்பு

நம் குடும்ப உறவுகளை நாம் எப்படி அனுபவித்தோம் என்பது,கர்த்தரை எப்படிச் சாதகமாகவும் எதிர்மறையாகவும் பார்க்கிறோம் என்பதைக் காட்டுகிறது. சில உதாரணங்கள்: நமது தந்தை வெகுதூரத்திலும்,இல்லாதும் இருந்தால்,கர்த்தரோடு நெருங்கிய அன்பான தந்தையாகத் தொடர்புகொள்வது நமக்கு கடினமாக இருக்கலாம். யாரும் நம்மைப் பாதுகாக்கவில்லை என்றால், நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்போம். நம் நண்பர்களால் நாம் கைவிடப்பட்டால்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மைக் கைவிடுவார் என்று நாம் நம்பலாம்.மாறாக,நாம் நம் தாயிடமிருந்து நிறைய ஆறுதல்களைப் பெற்றிருந்தால்,பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்படி ஆறுதல்படுத்துகிறார், பாதுகாக்திறார் என்பதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். இங்கே நாம் சில இணைப்புகளைக் காணலாம்:

தேவன்(கர்த்தர்) முக்கிய பங்கு உலகுக்குரிய குடும்பம்
பிதாவாகிய தேவன்
அடையாளத்தை வழங்கும் சிருஷ்டிகர்,வழங்குபவர், பேணுபவர்
பாதுகாப்பு,அடையாளம், தேவைகளை வழங்குதல் தந்தை
(மற்றும் ஆண் ஆதிக்கமுள்ளவர்)
இயேசு கிறிஸ்து
'கர்த்தர் நம்முடன், சிநேகிதர்,சகோதரர்
தொடர்பு,நட்பு,ஐக்கியம் உடன்பிறப்புக்கள்
(மற்றும் நண்பர்கள், சகாக்கள்)
பரிசுத்த ஆவியானவர்
ஆலோசனைக்கர்த்தா, ஆறுதல் அளிப்பவர் மூலம் நாம் மீண்டும் பிறந்தோம்
ஆறுதல்,வளர்ப்பு,கற்பித்தல், ஏற்றுக்கொள்ளுதல் தாய்
(மற்றும் பெண் சுபாவமுள்ளவர்)

கர்த்தரைப் பற்றிய தவறான எண்ணங்களிலிருந்து விடுபடுதல்

பெரும்பாலும் கர்த்தரின் உண்மையை நாம்(நம் தலையில் இருக்கிறது) அறிந்திருக்கிறோம்,அதை ஒப்புக்கொள்கிறோம்,ஆனால் நாம் அதற்கு வித்தியாசமான எதையோ செய்கிறோம். நமது செயல்களும் மனப்பான்மையும் நாம் உண்மையில் ஆழமாக நம்புவதைக் காட்டுகின்றன. நம் மனம் சொல்வதற்கும் இதயம் நம்புவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இது ஏனென்றால்,நம் இருதயங்கள் அந்த உண்மையை அனுபவிக்கவில்லை -அது பொய்களை நம்ப வைக்கும் துன்பங்களால்(வலிகள்) தடுக்கப்படுகிறது.நற்செய்தி என்னவென்றால்,இந்த வலிகள் மற்றும் தடைகள் என்ன என்பதை கர்த்தர் அறிந்திருக்கிறார்,மேலும் அவற்றை அடையாளம் காண அவர் நமக்கு உதவுவார்.நாம் பொய்களை மன்னித்துக் கைவிட்டால்,அவர் நம்மைக் குணப்படுத்தி மீட்டெடுக்க முடியும்.அவர் நம் தலைகளையும் இதயங்களையும் -முற்றுமாகச் சீரமைக்கிறார், அப்போது அவருடைய சத்தியத்திலிருந்து வரும் சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியும்.

இந்த செயல்முறை கர்த்தரிடம் கேள்விகளைக் கேட்பதில் தொடங்குகிறது. அவர்,நமக்கு வலிக்கும் பகுதிகளை வெளிப்படுத்தும்போது, ​​​​நாங்கள் பதிலளிக்கிறோம்: எங்கள் தந்தை,எங்கள் தாய் மற்றும் எங்கள் உடன்பிறப்புகள்/நண்பர்களை மன்னிக்கிறோம்.காயத்தின் காரணமாக நாம் நம்பத் தொடங்கிய பொய்களை அடையாளம் காண கர்த்தர் நமக்கு உதவுவார்.இந்தப் பொய்களை ஒத்துக் கொண்டு அறிக்கையிட்டு, மனந்திரும்புகிறோம்,மேலும் சத்தியத்தை எமக்கு வெளிப்படுத்தும்படி கர்த்தரிடம் வேண்டுகிறோம்.

இந்தச் சத்தியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கர்த்தருடனான நமது உறவு வளரும்,மேலும் நம்மால் இதற்கு முன்பு முடியாத வழிகளில் கர்த்தருடன் தொடர்பு கொண்டு உரையாட முடியும்.

விண்ணப்ப வழிகாட்டி

கர்த்தர் குடும்பங்களில் அன்பாய் இருக்கிறார். நாங்கள் தனியாக செயல்படவோ அல்லது வளரவோ சிருஷ்டிக்கப்படவில்லை - ஒரு நல்ல உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம். சில நேரங்களில் நாம் நீண்ட காலமாக நம்பியிருக்கும் விஷயங்கள் உண்மையில்லை(பொய்)என்று கூட உணருவதில்லை. இந்த விஷயங்களை அடையாளம் கண்டு நம்மைச் சுயாதீனத்திற்கு அழைத்துச் செல்ல மற்றொரு நபர் நமக்கு உதவ முடியும். உங்கள் இருதயம் மற்றும் மனதுக்குள் என்ன நடக்கிறது, அல்லது நீங்கள் எந்த விதத்திலாயினும் அசௌகரியமாக உணர்ந்தால்,அவற்றை உங்கள் உதவியாளரிடம் பகிரவும்.நீங்கள் கர்த்தருடன் உரையாடத் தயாராக இருந்தால்,இப்படித் தொடங்கலாம்

பிதாவாகிய தேவன்

1.பிதாவாகிய தேவனே,நான் உங்களை நன்றாக அறிய விரும்புகிறேன்.நீங்கள் இப்போதே உங்களை எனக்கு வெளிப்படுத்துங்கள்,நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்,என்ன செய்கிறீர்கள் என்பதைக் காட்டுவீர்களா?

2.நான் உம்மைப் பற்றி நம்புவது உண்மையில்லையா?(பொய்யா?) அப்படியானால், என்ன?

3.என் பூலோகத்திற்குரிய தந்தையை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்?

உங்கள் தந்தையை மன்னியுங்கள் (விவரங்களுக்கு “படிப்படியாக மன்னித்தல்” என்ற பணித்தாள் பார்க்கவும்).
உதாரணம்: ___ மற்றும் இந்த உண்மை இல்லாதவற்றை

(பொய்யை)என் வாழ்க்கையில் அனுமதித்ததற்காக என் தந்தையை நான் மன்னிக்கிறேன்.

4.கர்த்தவே, அந்தப் பொய்யுடன் கூட்டு சேர்ந்ததற்காக நான் வருந்துகிறேன்;தயவு செய்து என்னை மன்னிக்கவும். ___ என்ற பொய்யை நான் நிராகரிக்கிறேன்

5.பிதாவாகிய தேவனே, அதற்குப் பதிலாக உண்மை என்ன?

நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பேசுங்கள் மற்றும் இந்த புதிய உண்மைக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.


இயேசு கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் இதே வழியில் -படிகள் வழியாகச் செல்லுங்கள்:

இயேசு கிறிஸ்து

1. இயேசு கிறிஸ்துவே,நான் உம்மை நன்றாக அறிய விரும்புகிறேன். ..

3.நான் யாரை மன்னிக்க வேண்டும் (உதாரணம். உடன்பிறந்தவர்கள்/நண்பர்கள்)?
...

பரிசுத்த ஆவியானவர்

1.பரிசுத்த ஆவியானவரே, நான் உங்களை நன்கு அறிய விரும்புகிறேன். ...

3.என் பூலோகத்திற்குரிய தாயை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்?
...

கருத்துக்கள்

கர்த்தர் வழிநடத்துவது போல், நீங்கள் பொதுவான பல கேள்வியையும் கேட்க முடியும்: "நான் நம்பும் இந்தப் பொய்க்காக நான் யாரை மன்னிக்க வேண்டும்?" உதாரணமாக,பிதாவாகிய தேவனைப் பற்றிய பொய் ஆசிரியர்கள்,பிற உறவினர்கள் அல்லது மற்றும் அதிகாரத்திலுள்ள தலைவர்கள் அல்லது எஜமான்கள் போன்றவர்கள் மூலமாகவும் வந்திருக்கலாம். இது இயேசு கிறிஸ்துவையும் பரிசுத்த ஆவியானவரைப் பற்றியதாகவும் கூட இருக்கலாம்.

கர்த்தர் வெளிப்படுத்தும் உண்மைகளை எழுதுங்கள். அவை உங்கள் இருதயத்தில் பதியும் வரை தினமும் அவற்றைப் படித்து மீண்டும் மீண்டும் செய்யவும். இந்த உண்மையைப் பற்றிக் கொள்வதும் அவற்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதும் கர்த்தருடனான உங்கள் உறவில் குணமடையவும் வளரவும் முக்கியமாகும்.