Translations:Overcoming Pride and Rebellion/9/ta

கர்த்தர் நமக்கு வரங்களையும் திறமைகளையும் தந்தார்,அதனால் நாம் அவற்றை நன்மை செய்ய பயன்படுத்துகிறோம்.இந்தப் பொறுப்பைச் கையாளுவதற்கும், வெற்றியில் வரும் ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கும் கர்த்தர் நமக்கு உதவ விரும்புகிறார். ஆனால்,எனக்கு அவர் தேவையில்லை என்று நான் நம்புவதாலும் மற்றும் எனக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என்ற சுயநம்பிக்கையால்,(சுயம்) கர்த்தருடைய வழிகாட்டுதலில் இருந்து என்னைத் துண்டித்துக் கொள்கிறேன்.நமக்கு எது நல்லது என்று கர்த்தர் அறிவார்;நம்முடைய வலிமை மற்றும் பலவீனம் நம்மை விட அவருக்கு நன்றாகவே தெரியும். கீழ்பணிவாக இருப்பது என்பது கர்த்தருக்கும் மற்ற ஞானிகளின் அறிவுரைகளுக்கும் செவிசாய்ப்பதாகும்.